முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்; மின் இணைப்புடன் ஆதார் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றுக்கான மின்கட்டணம் இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீட்டு உபயோக மின் கட்டணத்துடன், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டிய இரட்டைச் சுமை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பதை கைவிட ேவண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிற்கு 1-ஏ என்ற அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்க வேண்டும் ஆகிய ேகாரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: