கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராணி (32). சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கணவர் ராமநாதனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, ஜெயராணி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்படி ஜெயராணியின் தாய் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து சமரசம் பேசினார். ஆனால், தம்பதிக்கு இடையில் வாக்குவாதம் முற்றியதால், சமரசம் தோல்வியில் முடிந்தது.இதற்கிடையே ஜெயராணியிடம் மீண்டும் கணவர் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். பிறகு ஜெயராணி போன் செய்து சாப்பிட வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பிறகு வீட்டில் அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர். பிறகு படுக்கைக்கு சென்ற ஜெயராணி, ெவளியே வரவில்ைல. சந்தேகமடைந்த ராமநாதன், படுக்கை அறைக்கு சென்றபோது, ஜெயராணி தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்தது தெரியவந்தது.  ராமநாதன், உடனே மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: