சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சுசீலா என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 24ம் ேததி பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து காவல் நிலையம் செல்ல 48பி மாநகர பேருந்தில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் பயணி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்துக்கொண்டு பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். இதை கவனித்த பெண் காவலர் சுசீலா செல்போனை பறித்து சென்ற குற்றவாளியை விடாமல் துரத்தி சென்று பிடித்தார். அவரிடம் இருந்து செல்போனை மீட்டு பயணியிடம் ஒப்படைத்தார். பிறகு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பயணி அளித்த புகாரின்படி பிடிபட்ட குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.