சென்னை: காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் இறந்த சம்பவத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலக காலனி காவலர்களுக்கு எதிரான வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.