மதுரை: 18 வயதிற்குகீழ் உள்ளவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோர்கள் காரணம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. செல்போன் வாங்கிக்கொடுத்து விட்டு பிள்ளைகள் மீது பெற்றோர் அக்கறை காட்டுவதில்லை.18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் எப்படி தெரியும் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியியுள்ளது.