சென்னை: 2001-02ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலை கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பி.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2001-2002ம் கல்வியாண்டில் (3-வது பருவம் முதல்) படித்தவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் சேர்ந்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பருவத்தேர்வில் பங்கேற்க அனுமதி தரப்படுகிறது.