சென்னை: ஓய்வு பெறக்கூடிய காவல்துறை அதிகாரிகளில், நீதிமன்றங்களுக்கும், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மூலம் நடத்தப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் ஓய்வு பெற உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அசன் முகமது ஜின்னா பேசும்போது, வழக்குகள் விசாரணையின்போது குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு மிகச்சிறந்த முறையில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உதவியுள்ளார். குற்றவியல் வழக்கறிஞர்கள் என்பவர்கள், காவல்துறை தரப்பு மற்றும் குற்றவாளி தரப்பு என நீதிமன்றத்தின் முன்பு அனைவருக்கும் பொதுவானவர்கள். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நாங்கள் காப்பாற்ற மாட்டோம்.