தாம்பரம்: தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன், கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்து வந்த பார்த்திபன் (31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மொத்த விற்பனையாளரான மங்கல்ராம் (29), மற்றும் சிவபெருமாள் (26) ஆகியோர் குறித்து தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.