ஜம்முவில் சோகம்: சிலிண்டர் வெடித்து பெண், குழந்தை பரிதாப பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டம் புஃப்லியாஸ் பகுதியில் உள்ள சண்டிமார் கிராமத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் சுவர்கள் இடிந்து நொறுங்கியது. வீட்டில் இருந்த 35 வயது பெண், 3 வயது குழந்தை, தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு குழந்தை காயமடைந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: