தொட்டிலில் இருந்து விழுந்த 4 வயது சிறுமி கவலைக்கிடம்

வேளச்சேரி: தொட்டிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 4 வயது சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.  இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்  கனிஷ்கா (4). இச்சிறுமி, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். நேற்று முன்தினம் மாலை  தொட்டிலில் கனிஷ்கா விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென தொட்டிலில் இருந்து கீழே விழுந்ததில், அவளது தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அலறிதுடித்தாள்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவல்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: