வேளச்சேரி: தொட்டிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 4 வயது சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள் கனிஷ்கா (4). இச்சிறுமி, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். நேற்று முன்தினம் மாலை தொட்டிலில் கனிஷ்கா விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென தொட்டிலில் இருந்து கீழே விழுந்ததில், அவளது தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அலறிதுடித்தாள்.