சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரபிரதேசத்தின் காசி வாரணாசிக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய கலாசார தொடர்பை புதுப்பிக்க காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமரை வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அவரை உற்சாகப்படுத்துவதற்கு மாறாக, தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரானவர் போல சித்தரிப்பது தவறு. விமர்சனம் என்பது நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே உள்ளது.