சென்னை: அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு வரும் 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் குறித்து அன்புமணி கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்கிறதா என்ற கேள்விக்கு, வரும் 2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். அதற்கான வியூகங்களை 2024ல் பாமக தொடங்கும் என்றும் அன்புமணி கூறினார்.