திருச்சி : திருச்சி மாநகரில் காவிரி ஆறு மற்றும் காவிரி பாலம் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. லால்குடி, முசிறி, துறையூர் மற்றும் சுற்று பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் திருச்சி காவிரி பாலம் வழியாக திருச்சி மாநகருக்கு வரவேண்டிய நிலையில், காவிரி பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு முன்பாக 4 சக்கர வாகனங்கள் காவிரி பாலம் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இருசக்கர வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது பாலத்தின் பராமரிப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இருசக்கர வாகனமும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு முழுவதுமாக காவிரி பாலம் மூடப்பட்டுள்ளது.