திருமலை : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் கொடிமரத்திற்கு அபிஷேகமும், 9.30 மணி முதல் 9.45 மணிக்கு இடையே தங்க கொடிமரத்தில் பத்மாவதி தாயாரின் பிரமோற்சவ கொடியேற்றமும் நடைபெற்றது.