பீகார் மாநிலத்தில் சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பீகார் மாநிலத்தில் நடந்த சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்:

பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது.

Related Stories: