அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி முக்கிய ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை நடக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்புபிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை   மக்கள் நல்வாழ்வு  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மாணவி பிரியா மரணத்தில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்களை கைது செய்தால், டாக்டர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  எவ்வாறு மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர்கள் கருதுகிறார்களோ அந்த அளவிற்கு அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுகட்ட முடியாதது. போராட்டம் குறித்து  மருத்துவர்களிடம் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளபட உள்ளது. மேலும், கால் பந்து வீராங்கனை பிரியாவும் மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. ஆபரேஷனுக்கு பிறகு காலில் கட்டு போடட்டால், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இது கொலை குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்யும்.

Related Stories: