முசிறி: எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து திருச்சி எஸ்பி நேற்று உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் செல்வராஜ். இவர், காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொதுமக்களிடம் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. விசாரணையில், புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் சப் இன்ஸ்பெக்டர் அருண் கையெழுத்தை போலியாக போட்டு போலீஸ்காரர் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.