நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளே சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளே, சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சாதியின் பெயரால் கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம். தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம் ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா விழி, எழு, நட. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: