சென்னை: சென்னையில் இருந்து கோவை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் நாளை மறுநாள் (23ம் தேதி) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (06061) வரும் 23 ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை அன்று இயக்கப்படும். அதே போல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். அதேநேரம், மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (06062) கொல்லத்தில் இருந்து காலை 8:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 03:50 மணிக்கு சென்னையை வந்தடையும்.