அவுரங்காபாத்: சத்ரபதி வீர சிவாஜியுடன் ஒப்பிட்டும், மாணவர்களின் ‘ரோல் மாடல்’ நிதின் கட்கரி என்று மகாராஷ்டிரா ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநர் கோஷ்யாரி, ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். தொடர் அவர் பேசுகையில், ‘நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது உங்களுக்குப் பிடித்த ஹீரோ, தலைவர் யார் என்று கேட்டால், நாங்கள் சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, காந்தி போன்ற தலைவர்களின் பெயர்களை கூறுவோம். தற்போது உங்களின் ரோல்மாடல் யார் என்று எவராவது உங்களை (மாணவர்கள்) கேட்டால், அதற்காக நீங்கள் வெளியே சென்று ரோல்மாடலை தேடவேண்டாம். அவர்களை இங்கேயே (நிதின் கட்கரி) காணலாம்.
