கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று காலை வானில் சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது. இந்நிகழ்வை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை சூரியனை சுற்றி ஒளி வட்டம் தென்பட்டது. சில மணி நேரங்கள் மட்டுமே இந்த ஒளிவட்ட நிகழ்வை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘சூரியனையோ அல்லது நிலவை சுற்றியோ தென்படும் பிரகாசமான ஒளி வளையத்தை 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று கூறுகிறோம். இது பெரும்பாலும் முற்பகல் பொழுதில் காணப்படும்.