புதிய நிர்வாகிகளுடன் விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: புதியதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று அந்தகட்சியின் ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தால் புதியதாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சென்னை கீரீன்வேஸ் சாலையில் உள்ள  இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

அப்பொழுது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருவதாகவும் புதிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்தித்து பேசுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதுமாக விரைவில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திப்பேன் என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம் பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமி கூறிய மெகா கூட்டனி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Stories: