சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் குளறுபடி: பருவத்தேர்வுகள் ரத்து?

சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகதுணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இளங்கலை மாணவர்களுக்கான 3-வது செமஸ்டர் தமிழ் தேர்வு இன்று காலை நடைபெற இருந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு சென்ற பின் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

இதையடுத்து 4-வது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாளை, இன்று 3-வது செமஸ்டர் தேர்வெழுத சென்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மாணவர்கள் திகைத்து போயினர். அடுத்த முறை எழுத வேண்டிய தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டிய வழங்கப்பட்டதால் மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் தவித்தனர். இந்த கேள்வித்தாள் குளறுபடியால் குறிப்பிட்ட செமஸ்டர் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: