திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் பேசியதாவது: ஒற்றை கலாச்சாரம், ஒரே தலைமை எனும் இந்துத்துவா ராஜ்யத்தை நிறுவும் திட்டத்தை பாஜ அரசு மூலம் கடந்த 8 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் செயல்படுத்துகிறது. இந்துத்துவம், கார்ப்பரேட் மயமாக்குவதற்காக, தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் பெண்கள், பழங்குடியினர் மீது கொடிய தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் காலூன்ற அனைத்து வித சூழ்ச்சிகளையும் செய்கிறது. அதற்காக, தி.மு.க. அரசை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.