சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆழ்கடல் மீன்படி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு செல்லவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.