நாகை: தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2வது நாளாக கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க ஆண்டுதோறும் கடலோர பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். தீவிரவாதிகளை கண்காணித்து அவர்கள் ஊடுருவாமல் தடுக்கவும், தங்கம், ஹெராயின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்கவும் தமிழக கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் மேற்கொண்டுள்ள சி விஜில் 2022 ஆப்ரேஷன் பாதுகாப்பு என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டுள்ளனர்.