லண்டன்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள் தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது 800 கோடி என்ற மக்கள் தொகை எண்ணிக்கையை பூமி எட்டியுள்ளது. 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா உள்ளிட்ட நாடுகள் கொண்டிருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.