சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் தலைமை செயலகத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஒவ்வொரு வருடமும் நகர்புற உள்கட்டமைப்பு சார்பாக பொதுமக்களிடம் நட்புணர்வோடு செயல்படும் நிறுவனங்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்குவது நடைமுறையில் உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க பயணிகள் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எற்படும் குறைகளை வாட்ஸ் அப் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தீர்வு செய்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.