மதுரை: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்பதாக எடப்பாடி தரப்பில் ஜெயக்குமார் கூறிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மாற்று கருத்து தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இடம் பிரதமர் பேசவே இல்லை என உதயகுமார் கூறிய நிலையில், மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியையும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக இருந்தது. எங்களது ஆதரவாளர்கள் யாரும் மன வருத்தத்தில் இல்லை; மகிழ்ச்சியாக உள்ளனர். 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.