சென்னை: டெல்டாவில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமுற்றதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.