கண்டமங்கலம்: விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பால பணி தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணி வில்லியனூரில் தொடங்கி பள்ளித்தென்னல் பகுதி வரை தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளித்தென்னல் பகுதியில் சிறிய பாலம் கட்டும்படி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை அருகே ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் கல்லூரி மாணவர் இரவு பயிற்சி மருத்துவர் பணியை முடித்துவிட்டு தனது காரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.