பெரம்பூர்: வட சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நவம்பர் புரட்சி தினத்தையொட்டி பெரம்பூர் பகுதியில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதன் பின்னர் பெரம்பூர் கவுதமபுரத்தில் ‘’நவம்பர் புரட்சியை போற்றுவோம்’’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது; உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. உழைப்பாளி வர்க்கம் முதன் முதலில் ஆட்சி கட்டிலை பிடித்த தினத்தை கொண்டாடுவதே நவம்பர் புரட்சி. சோவியத் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், மனித சுரண்டலுக்கு முடிவு கட்டி ஒரு சோசலிச ஆட்சியை உருவாக்கியது.நாக்கில் நரம்பில்லாத மோடி போல் ஒருவரை பார்க்க முடியாது.