சம்பா: ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் 2 பஸ்கள் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் அதிவேகமாக ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் சிலர், லேசான தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் முன்னால் சென்ற ஒரு பஸ்சை முந்த முயன்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் அலறி கூச்சலிட்டனர்.