பல்லாவரம்: பல்லாவரம் அருகே பெயின்ட் பொருட்களை ஏற்றி வந்த லாரி மின் கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அருகே பம்மல், நாகல்கேணி பகுதியில் ஒரு தனியார் பெயின்ட் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு நிறுவனங்களின் பெயின்ட் பொருட்களை மொத்தமாக சேமித்து, சென்னை நகரின் பல்வேறு கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வருவது வழக்கம். இந்த குடோனுக்கு பல்வேறு நிறுவனங்களின் பெயின்ட் மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. இந்த லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான் (35) ஓட்டி வந்தார். லாரியில் பல லட்சம் மதிப்பிலான சுமார் 18 டன் எடையிலான பெயின்ட், தின்னர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன.