டெல்லி: இன்று புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பதவியேற்பு விழாவில் இருந்து, பதவியேற்பு விழாவை பிரதமர் மோடி தவறவிட்டதில்லை. இந்நிலையில் புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.