காஞ்சிபுரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமானது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளன்டர்களை சந்தித்து பேசிய அவர்; சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்று தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. திருக்கோயில் வருமானம் குறித்து கணக்கு கேட்கும் போது பதில் சொல்வது தீட்சிதர்களின் கடமை. கோயிலின் உள்ளே மானாவாரியாக இஷ்டத்துக்கு கட்டடங்களை எழுப்பி இருக்கிறார்கள்.