சேலம்: சேலம் சின்னதிருப்பதியில் வசித்து வந்தவர் நஷீர்ஜகான்(82). இவரது கணவர் ஹபீஸ்கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள். அனைவருக்கும் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றனர். நஷீர்ஜகான் மட்டும் தனியாக சேலத்தில் வசித்து வந்தார். கடந்த 3ம் தேதி காலை 11 மணியளவில் 2 பேர் வீடு வாடகைக்கு இருக்கிறதா? என வந்து கேட்டுள்ளனர். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நஷீர்ஜகான் கூறியுள்ளார். பின்னர் அந்த 2 பேரும் சென்றுவிட்டனர். மாலை 3 மணிக்கு அதே 2பேர் மீண்டும் வந்து, நஷீர்ஜகானை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.