ப்ரசிலியா: பிரேசில் நாடாளுமன்ற தேர்தலை செல்லாது என்று அறிவிக்க கோரி தோல்வியடைந்த போலிசோனாரோவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. பிரேசில் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. விரைவில் பிரேசில் அதிபராக லூலா பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்கு எதிராக போலிசோனாரோவின் ஆதரவாளர்கள் நாடு தழுவிய தொடர் போராட்டத்தை முன் எடுத்துள்ளன. தேர்தலில் 1% குறைவாக வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே போலிசோனாரோ தோல்வி அடைந்து இருப்பதால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.