டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் தொடக்க பள்ளிகளை நாளை முதல் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு குறைந்து இயல்பு நிலை திருப்பும் வரை டெல்லியில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதையும் வியாபித்திருக்கிறது. இதனால் காற்றில் பிராண வாயுவின் விழுக்காடு பெருமளவு குறைந்து காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.