சென்னை: புதிதாக மாற்றியமைக்கப்பட்ட தென்காசி மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி வடக்கு மாவட்ட அவைத் தலைவராக பத்மநாபன், செயலாளராக ஈ.ராஜா, துணை செயலாளர்களாக வே.மனேகரன்(பொது), ராஜதுரை(ஆதி திராவிடர்),புனிதா(மகளிர்), பொருளாளராக இல.சரவணன், தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவராக சுந்தரமகாலிங்கம், செயலாளராக சிவபத்மநாபன், துணைச் செயலாளர்களாக தமிழ்ச்செல்வன்(பொது), கென்னடி(ஆதி திராவிடர்), கனிமொழி(மகளிர்), முகம்மது செரிப்(பொருளாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.