பாதுகாப்பு துறை செயலாளராக கிரிதர் பொறுப்பேற்பு

புதுடெல்லி: பாதுகாப்பு துறை புதிய செயலாளராக கிரிதார் அரமனே பொறுப்பேற்றார். பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த அஜய்குமாரின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதையடுத்து, புதிய பாதுகாப்பு துறை செயலாளராக கிரிதார் அரமனே நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் இந்த பொறுப்பை ஏற்றார். முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய கிரிதர், ‘இந்த வீரமிக்கவர்களிடம் இருந்து நாங்கள் உத்வேகம் பெறுகிறோம். இந்தியாவை பாதுகாப்பான, வளமான நாடாக மாற்றுவதற்கான அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவோம்,’ என தெரிவித்தார்.

இதற்கு முன், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை செயலாளராக கிரிதர் இருந்தார். இவர், ஆந்திராவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

Related Stories: