டெல்லி: டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நரேலா தொழில் நகரத்தில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு நெருப்பு பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து 10 வாகனங்களில் வந்த டெல்லி தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைக்க தீவிரமாக போராடினர்.