சென்னையில் டிஜிபிக்கள் பிரிவு உபசார விழா: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்பு

சென்னை: காவல்நிலையத்தில் எல்ல நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விசியமல்ல என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார். டிஜிபிக்கள் ஷகில் அக்தர், சுனில்குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறையை சுனில்குமார் சிங்கும், ஷகில் அக்தரும் நேர்மையான அதிகாரிகளாக விளங்கினார்கள் எனவும் எல்ல நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல எனவும் பேசினார். மேலும் ஷகில் அக்தர் காவல்துறையில் எப்போதும் முக்கியமான பொறுப்புகளை கையில் வைத்திருந்தவர் எனக் கூறிய அவர் ஆபத்தான ஆப்ரேசன்களில் ஈடுபட்டவர் எனவும் தெரிவித்தார்.

Related Stories: