ராமேஸ்வரம் திருக்கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரதம் இன்று வெள்ளோட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் வீற்றிருக்கும் அருள்மிகு பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரதம் கடந்த 12 ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு சென்றவுடன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், துறை அலுவலர்களும் இராமேஸ்வரத்திற்கு வருகை தந்து தங்க ரதத்தை ஓட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் இன்று ராமேஸ்வரம் திருக்கோயிலில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரதம் இன்று ஓட்டப்பட்டது.

Related Stories: