சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கியுள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள சுரங்க பாதைகளை நேரடியாக கண்காணிக்கவும், சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக ரெட் அலர்ட் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கவும், பெரிய நீர்த்தேக்கங்கள், முகத்துவாரங்கள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் ஒரே நேரத்தில் 15 பேர் தொடர்பு கொள்ளும் முடியும். பேரிடர் நேரத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.