சென்னை: சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பகுதி அலுவலகம்-12க்கு (ஆலந்தூர்) உட்பட்ட உதவி பொறியாளர் அலுவலகப் பணிமனை-156 தற்போது சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, முகலிவாக்கம், சென்னை-116 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. முகலிவாக்கம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பணிமனை-156 அலுவலக வளாகத்திற்குள் நடைபெற இருப்பதால் இப்பணிமனை அலுவலகம், 1.11.2022 (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய முகவரியான முகலிவாக்கம் அரச மரம் நீரேற்று நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.