பொள்ளாச்சியில் அரசு பஸ்-கார் மோதி கணவர் பலி; மனைவி படுகாயம்

ஆனைமலை : பொள்ளாச்சி வால்பாறை சாலையோரம் நின்ற அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில், முதியவர் இறந்தார். மனைவி காயமடைந்தார்.பொள்ளாச்சி விகேவி லே அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (73). இவர் நேற்று காலையில், தனது  மனைவி சாந்தியுடன், கோட்டூர் அருகே தென்சங்கம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண  மண்டபத்தில் நடக்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.  காரை, அவரது மனைவி சாந்தி ஓட்டி சென்றுள்ளார்.

 வால்பாறை ரோடு  கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார்,  அங்கு ரோட்டோரம் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக நின்ற, அரசு பஸ்  பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில்  பயணித்த ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  தகவலறிந்த கோட்டூர்  போலீசார், காயமடைந்த சாந்தியை மீட்டு, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், வால்பாறை ரோட்டில்  பரபரப்பு உண்டானது.

Related Stories: