செங்கம் : செங்கம் அடுத்த மேல் செங்கம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கால்பந்து போட்டி, வாலிபால், கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.