ஜம்மு ரயில் நிலையம் அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு: தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

ஜம்மு: ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு நடத்த இருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நேற்று ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. இதனைப் பார்த்த கார் ஓட்டுனர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது அதில் இரண்டு பெட்டிகளில் 18 டெட்டேனட்டர்கள், வயர்கள், 500 கிராம் மெழுகு போன்ற பொருள் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து ரயில்வே போலீஸ் மூத்த அதிகாரி ஆரிப் கூறுகையில், ‘இது கண்ணிவெடியாக வெடிக்க கூடிய நிலையில் இல்லை. டெட்டனேட்டர்கள் தனியாக வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்க கூடும். தகவல் தெரிந்ததால் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Related Stories: