தீவிரவாத கலாசாரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது உ.பா.சட்டம் பாய்ந்துள்ளது. தமிழக காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இது தீவிரவாத செயலா என்பதை கண்டறிந்து தமிழ்நாட்டில் தீவிரவாத கலாசாரம் தலை தூக்கா வண்ணம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி, மக்களுக்கு பாதுகாப்பான அச்சுறுத்தல் இல்லாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: